தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் 23 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைப்பெறுகிறது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் தனித்து களம் காண்கிறது.இதனால் தமிழகம் முழுவதும் தவெக தொண்டர்கள், நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பூந்தமல்லி 1 வது வார்டு மேல்மாநகரில் பூந்தமல்லி சட்டமன்ற தொகுதியில் தவெக சார்பில் களம் காணும் குட்டி (எ) பிரகாசத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் தவெகவினர் ஈடுப்பட்டனர்.

ஆண்கள் பெண்கள் என 300 க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகத்தினர் வீதி வீதியாக சென்று தவெக வேட்பாளர் பிரகாசத்திற்கு விசில் சின்னத்தில் வாக்கு செலுத்துமாறு கோரினர்..
குறிப்பாக பஜனை கோவில் தெரு,மாரியம்மன் கோவில் தெரு,படவட்டம்மன் கோவில் தெரு ஆகிய தெருக்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட தவெகவினர் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக வந்தால் நிச்சயம் ஊழல் அற்ற ஆட்சியை தருவார் என கூறினர்….

வாக்கு கேட்பு நிகழ்ச்சியில் முக்கிய நகர நிர்வாகிகள்,வார்டு நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் ….




